இன்று வெளியாகியிருக்கும் ‘போத’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியிருப்பவர் ஆர்.எஸ்.விக்னேஷ்வரன் எனும் விக்கி.
தனது முதல் படத்திலேயே ஆண் பாலியல் தொழிலாளியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விக்கி, தனது நடிப்பு அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துக் கொண்டது இதோ,
சின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை, காரணம் எனது தந்தை ராஜசேகரும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டவர் தான். பல வருடங்களுக்கு முன் ‘எத்தனை மனிதர்கள்’ உள்ளிட்ட ஒரு சில டிவி சீரியல்களில் தலை காட்டிய என் தந்தை குடும்ப பாரம் காரணமாக சினிமா நடிகனாக ஜெயில்ல முடியாமல் போய்விட்டது. அதனால், அவரது ஆசையை எனது ஆசையாகவும் லட்சியமாகவும் நான் எடுத்துக் கொண்டேன்.
அதன்படி, காலேஜ் புராஜக்ட் வேலை விஷயமாக சென்னை போகிறேன், என்று கூறிவிட்டு சென்னை வந்த நான், ஆக்டர்ஸ் ஸ்டுடியோ எனும் தனியா நடிப்பில் பள்ளியில் நடிப்புக் கற்றபடி நடிக்க வாய்பு தேடி அலைந்தேன்.
வடகறி, அச்சமில்லை அச்சமில்லை, நிலா உள்ளிட்ட திரைப்படங்களில் சிறியதும் பெரியதுமான வேடங்களில் நடித்தபடி, நடிப்புக் கற்றுக் கொண்ட நான், ஆக்டர்ஸ் ஸ்டுடியோ பள்ளியிலேயே மற்றவர்களுக்கு நடிப்பு கற்றுத் தந்தபடி, கோடம்பாக்கத்தில் தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்தேன்.
பிறகு போத படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அதில் நடித்து முடித்து படமும் வெளியாகிவிட்டது, என்று கூறியவரிடம், ஆண் பாலியல் தொழிலாளியாக நடித்சிருக்கீங்களாம? என்றதற்கு, அது சும்மா ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே சார், மொத்த திரைக்கதைலும் சரி தப்பு எதுன்னு தெரியாமல் பொய், திருட்டு, என பணத்தை சேஸ் பண்ணிப் போறது தான் என் கேரக்டர். படத்தில் ஹீரோயினே இல்லன்னாலும், காமெடியாக கதை சொல்லப்பட்டிருக்கும் போத படத்தை பேமிலியா போய் பார்க்கலாம், அதற்கு நான் கேரண்டி, என்றும் கூறுகிறார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...