Latest News :

படத்தின் வெற்றியால் தான் என் குடும்பம் ஒன்று சேரும் - ஹீரோயினின் உருக்கமான பேச்சு
Friday July-20 2018

நாகை பிலிம்ஸ் கே.டி.முருகன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘வினை அறியார்’. ‘கோலி சோடா’ புகழ் முருகேஷ், ‘என்னை அறிந்தால்’, ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜாக், உதயராஜ், குரு, கமலி என்று விடலைப் பசங்களுடன் சிசர் மனோகர், நிர்மலா ஆகியோர் நடித்ஹ்டிருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு அன்பரசு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை தஷி அமைத்திருக்கிறார்.

 

இப்படத்திற்கு ரஞ்சித் ஒளிப்பதிவு செய்ய, பன்னீர் செல்வம் படத்தொகுப்பு செய்திருக்கிறார். மக்கள் தொடர்பை சரவணன் கவனிக்கிறார்.

 

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னை எம்.எம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநரும் நடிகருமான மனோஜ்குமார், இயக்குநர் சண்முகசுந்தரம், பாடலாசிரியர் விவேகா மற்றும் படக்குழுவினர்கள் கலந்துக் கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய நாயகி கமலி, “என் அப்பா அம்மாவிடம் இருந்து எனக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், எனக்குப் பிடிக்காத என்னால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட என் பாட்டி தான் எனக்கு உதவியாக இருந்தார். இந்த மேடையில் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது அவரது வீட்டில் தான் இருக்கிறேன். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் என் பெற்றொரைப் பார்ப்பேன். நான் நாயகியாக நடிப்பதில் என் பெற்றோர்களுக்கு உடன்பாடில்லை. இந்தப் படம் வெற்றி பெற்று என் குடும்பம் ஒன்று சேர வேண்டும். ஹீரோ என்னைவிடச் சின்னைப்பையனா தெரிகின்றாரே என்று தயங்கினேன். ஆனால், ஸ்கினில் மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது.” என்றார்.

 

Actress Kamali

 

பாடலாசிரியர் விவேகா பேசும் போது, வினை அறியார் என்று மிகவும் அழகான வார்த்தையைத் தலைப்பாக வைத்திருக்கின்றார் கே.டி.முருகன். தாங்கள் செய்யும் செயல்களால் ஏற்படப்போகும் விளைவுகள் தான் வினை. அதை அறியாத விடலைப்பசங்களான நாயகன், நாயகியர் செய்யும் செயல்கள் தான் படம் என்று யூகிக்க முட்கிறது. குழுவினருக்கு வாழ்த்துகள்.” என்றார்.

 

இயக்குநர் மனோஜ்குமார் பேசும் போது, “தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர் நான், செயலாளர் நீங்க. ஆகவே, நான் இயக்கித் தயாரித்திருக்கும் படத்திற்கு நீங்கள் வர வேண்டும் என்று வெள்ளந்தியான ஒரு அதிகார தோரணையில் அழைத்தது என்னை வெகுவாகக் கவர்ந்தது. இதுபோன்ற எளிமையான கலைஞரின் படைப்புகளுக்கு எங்கள் சங்கம் என்றும் துணை நிற்கும்.” என்றார்.

 

இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.டி.முருகன் பேசுகையில், “25 ஆண்டுகள் போராட்டத்தின் வெற்றியாக இந்த மேடையில் நிற்கின்றேன். 2012 ஆம் ஆண்டு ‘வங்கக்கரை’ என்கிற படத்தை எடுத்தேன். போதிய முன் அனுபவம் இல்லாததால், அதனைச் சரியாகக் கொண்டு சேர்க்க முடியவில்லை. ஆனால், அதில் கிடைத்த பல அனுபவங்களுடன் வினை அறியார் படத்தை தயாரித்து இயக்கியிருக்கின்றேன். ரசிகர்களுக்குப் போட் அடிப்பது போல ஒரு காட்சி கூட இதில் இருக்காது. ஆகஸ்டு 24 ஆம் தேதி இப்படத்தை திரையிட உள்ளேன்.” என்றார்.

Related News

3077

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery