கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. காமெடி நாயகன் வடிவேலு முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்த இப்படத்தை சிம்பு தேவன் இயக்க, இயக்குநர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார்.
முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டாலும், படத்தில் நாட்டில் நடக்கும் சில அவங்களை நகைச்சுவையாக சுட்டிக்காட்டியிருந்தார் இயக்குநர் சிம்புதேவன். விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பு தேவன் கூறிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோடு, பணிகளும் தொடங்கியது.
இந்த நிலையில், ‘இம்சை அரசன் 24.ம் புலிகேசி’ என்ற தலைப்புடன், இம்சை அரசனின் இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
’ராஜ டரியலுடன் இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்’ என்ற வாசகத்தோடு, போஸ்டரே நமக்கு குபீர் சிரிப்பை வரவைக்க, படம் என்ன பாடுபடுத்தப்போகிறதோ!
வாங்க ராஜா காத்திருக்கிறோம்!
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...