Latest News :

பரிசோதனை முயற்சியில் நடிகை நமீதா பிரமோத்
Saturday July-21 2018

’நிமிர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள நமீதா பிரமோத், மலையாளத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தாலும், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வர வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்.

 

நடிப்பு, நடனம் என இரண்டிலும் பாராட்டு பெற்று வரும் இவர், கலை மற்றும் தொழில்நுட்பம் என இரண்டிலும் தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது, என்று கூறுவதோடு, தமிழ் சினிமாவின் கிரியேட்டிவிட்டியை கண்டு பிரமித்திருக்கிறாராம்.

 

நமீதா பிரமோத் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கம்மர சம்பவம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அவர் நடித்த பானுமதி என்ற கதாபாத்திரம் ரசிகர்களை கூடுதலாக ஈர்த்தது. தற்போது திலீப்புடன் 3டி படம் ஒன்றில் நடித்து வரும் நமீதா பிரமோத், அப்படம் பற்றி கூறுகையில், “இது ஒரு மிகப்பெரிய பரிசோதனை முயற்சியாகும். பெரிய அளவில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கொச்சியில் நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்து கொச்சி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளது.” என்றார்.

 

தனது நடனத் திறமை பற்றி கூறியவர், “சினிமாக்கள் மூலம் தான் நான் நடனம் கற்றுக் கொண்டேன். பிருந்தா மாஸ்டர், ஷோபி பால், தினேஷ் மற்றும் சிலர் மூலம் நடன திறமையை வளர்த்து கொண்டேன்.” என்று தன்னடக்கத்தோடு பேசுகிறார்.

Related News

3083

’இட்லி கடை’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு!
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

வந்த வழியையும், வாழ்ந்த வாழ்க்கையையும் என்றைக்கும் மறக்கக் கூடாது - நடிகர் தனுஷ்
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

Kollywood Stars in A Rhapsody 2025
Monday September-15 2025

The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...

Recent Gallery