’நிமிர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள நமீதா பிரமோத், மலையாளத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தாலும், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வர வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்.
நடிப்பு, நடனம் என இரண்டிலும் பாராட்டு பெற்று வரும் இவர், கலை மற்றும் தொழில்நுட்பம் என இரண்டிலும் தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது, என்று கூறுவதோடு, தமிழ் சினிமாவின் கிரியேட்டிவிட்டியை கண்டு பிரமித்திருக்கிறாராம்.
நமீதா பிரமோத் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கம்மர சம்பவம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அவர் நடித்த பானுமதி என்ற கதாபாத்திரம் ரசிகர்களை கூடுதலாக ஈர்த்தது. தற்போது திலீப்புடன் 3டி படம் ஒன்றில் நடித்து வரும் நமீதா பிரமோத், அப்படம் பற்றி கூறுகையில், “இது ஒரு மிகப்பெரிய பரிசோதனை முயற்சியாகும். பெரிய அளவில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கொச்சியில் நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்து கொச்சி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளது.” என்றார்.
தனது நடனத் திறமை பற்றி கூறியவர், “சினிமாக்கள் மூலம் தான் நான் நடனம் கற்றுக் கொண்டேன். பிருந்தா மாஸ்டர், ஷோபி பால், தினேஷ் மற்றும் சிலர் மூலம் நடன திறமையை வளர்த்து கொண்டேன்.” என்று தன்னடக்கத்தோடு பேசுகிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...