Latest News :

காமராஜர் பெயரில் சினிமா நிறுவனம் தொடங்கிய கரிகாலன்! - 10 படங்கள் தயாரிக்கிறார்.
Sunday July-22 2018

கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘சோலையம்மா’ படம் மூலம் கொடூரமான வில்லனாக அறிமுகமானவர் ‘கரிகாலன்’. இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், ’ரமணா’, ‘அரவான்’, ‘அடிமைச்சங்கிலி’, ‘நிலாவே வா’, ‘கருப்பு ரோஜா’, ‘தயா’, ‘தேவன்’ உள்ளிட்ட முக்கியமான படங்களில் நடித்ததோடு, ‘வைரவன்’ என்ற படத்தை இயக்கி நடித்தார்.

 

சில காலம் நடிப்பு இயக்கம் என்று எதிலும் ஈடுபடாமல், ரியல் எஸ்டேட் துறையில் கவனம் செலுத்தியவர் அதில் உச்சத்தை தொட்டார்.

 

தற்போது மீண்டும் சினிமாத் துறைக்கு திரும்பியிருக்கும் கரிக்காலன், காமராஜார் மீது கொண்ட பற்றின் காரணமாக, ‘காமராஜர் கனவுக் கூடம்’ என்ற அமைப்பு ஒன்றை தொடங்கி அதன் மூலம் பல்வேறு வகையில் மக்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, திரைப்படங்கள் வாயிலாகவும் ஒழுக்கங்களை போதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளவர் 10 திரைப்படங்களை தனது காமராஜர் கனவுக் கூடம் சார்பில் தயாரிக்க உள்ளார்.

 

இது குறித்து பேசிய நடிகர் கரிகாலன், “மது ஒரு மனிதனையும், அவன் குடும்பத்தையும் மட்டும் அல்ல, ஒரு நாட்டையே சின்னா பின்னமாக்கி வருகிறது. அடிப்படை கல்வியால் போதிக்க வேண்டிய கல்வி, ஒழிக்கம், தேசப்பற்று, பெரியவர்களுக்கும் மரியாதை, உற்சாகமாக இருப்பது, உடற்கல்வி போன்றவையோடு பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, பக்தி ஆகியவற்றை போதிக்க தவறி விட்டோம். அதும் மட்டும் அல்லாமல் ஏழை எளியோருக்கு பள்ளிகள், குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான திரையரங்குகள், திருமண மண்டபங்கள் என்று செயலாற்ற இருக்கிறோம். அதோடு இன்றைய தேவையான கம்ப்யூட்டர் கல்வியையும் போதிக்க உள்ளோம்.

 

Karikalan

 

இதையெல்லாம் அடிப்படை கல்வியாக போதித்து இருந்தால் நம் நாடு உலக மக்களிடையே முதல் நாடாக இருந்திருக்கும். இதையெல்லாம் நடை முறை படுத்த வேண்டுமானால் என் கையில் உள்ள ஆயுதத்தால் செயலாக்க முடியும் என்று யோசித்தேன். அந்த ஆயுதம் சினிமா, அதனால் தான் சினிமா நிறுவனம் ஆரம்பித்துள்ளேன்.

 

அதன் மூலம் சமுதாயத்திர்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க இருக்கிறோம்.

 

எங்களால் எல்லோரையும் திருத்த முடியாது, ஒரு சிலராவது மாறினால் நல்லது என்கிற என்ணம் தான் எங்களுக்கு.

 

நான் கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன், அதனால் எனக்கு ஒரு ஆசை, என்னை சுற்றி எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று. அதற்காக நிறைய முயற்சிகளை எடுக்கிறேன்.” என்றார்.

 

10 படங்களில் முதல் தயாரிப்பாக உருவாகும் படத்திற்கு ‘பெருந்தலைவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதோடு, அதில் கதையின் நாயகனாக கரிகாலன் நடிக்க, அவருடன் நான்கு இளைஞர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்களாம்.

 

இந்த படத்துடன் இன்னும் இரண்டு படங்கள் என மூன்று படங்களின் தொடக்க விழாவை விரைவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்திருக்கும் கரிகாலன், அந்த நிகழ்ச்சி திரைப்படங்கள் குறித்த பிற விபரங்களை அறிவிக்க உள்ளார்.

Related News

3087

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery