நடன இயக்குநராக இருந்த லாரன்ஸ், ‘முனி’ படம் மூலம் நடிகர் மற்றும் இயக்குநரானார். பிறகு முனி படத்தின் இரண்டாம் பாகமாக ‘காஞ்சனா’ படத்தை இயக்கியவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவாக உருவெடுத்தார். அதேபோல், முனி மூன்றாம் பாகமாகந் ‘காஞ்சன-2’ படத்தை எடுத்து அதிலும் பெறிய வெற்றி பெற்றார்.
இதற்கிடையே தொடர் வெற்றியால் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நினைத்த லாரன்ஸ், நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படுமோசமான தோல்வியை சந்திக்க, பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்த ‘சிவலிங்கா’ படமும் பிளாப்பாகிவிட்டது.
இந்த நிலையில், இனி கமர்ஷியல் படங்கள் வேண்டாம், தனக்கு தொடர் வெற்றியை கொடுத்த ‘காஞ்சனா’ பேயே போதும், என்று எண்ணிய ராகவா லாரன்ஸ் தற்போது மீண்டும் தனது பேய் பயணத்தை தொடங்கியுள்ளார்.
முனி படத்தின் நான்காம் பாகமாக உருவாகும் இப்படத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவலை விரைவில் அறிவிக்க உள்ளார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...