நடன இயக்குநராக இருந்த லாரன்ஸ், ‘முனி’ படம் மூலம் நடிகர் மற்றும் இயக்குநரானார். பிறகு முனி படத்தின் இரண்டாம் பாகமாக ‘காஞ்சனா’ படத்தை இயக்கியவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவாக உருவெடுத்தார். அதேபோல், முனி மூன்றாம் பாகமாகந் ‘காஞ்சன-2’ படத்தை எடுத்து அதிலும் பெறிய வெற்றி பெற்றார்.
இதற்கிடையே தொடர் வெற்றியால் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நினைத்த லாரன்ஸ், நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படுமோசமான தோல்வியை சந்திக்க, பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்த ‘சிவலிங்கா’ படமும் பிளாப்பாகிவிட்டது.
இந்த நிலையில், இனி கமர்ஷியல் படங்கள் வேண்டாம், தனக்கு தொடர் வெற்றியை கொடுத்த ‘காஞ்சனா’ பேயே போதும், என்று எண்ணிய ராகவா லாரன்ஸ் தற்போது மீண்டும் தனது பேய் பயணத்தை தொடங்கியுள்ளார்.
முனி படத்தின் நான்காம் பாகமாக உருவாகும் இப்படத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவலை விரைவில் அறிவிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...