திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மோகினி’ திகில் படம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகிறது.

‘மதுர’, ‘சாக்லெட்’, ‘அரசாங்கம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய மாதேஷ், இயக்கியிருக்கும் ’மோகினி’ படத்தின் 85 சதவீத படப்பிடிப்பு லண்டன், ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் திரிஷா மோகினி மற்றும் வைஷ்ணவி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் திரிஷா நடிக்க தொடங்கினாலும், ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிப்பாராம். அதேபோல் நல்ல கதையாக இருந்தால் தொடர்ந்து பேய் படங்களில் நடிப்பாராம்.

தனது சொந்த வாழ்க்கையில் இதுவரை எந்த பேய் அனுபவத்தையும் சந்திக்கவில்லை என்றாலும், திரிஷாவுக்கு பேய் மீது நம்பிக்கை இருக்கிறதாம்.



ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...