ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பஸ்ட் லுக் மூலம் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படத்தில் அரசியல் வசனங்கள் பல அனல் கக்கும் விதத்தில் நெருப்பாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்பதில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதனால், ஒட்டு மொத்த படக்குழுவே ஓய்வு இல்லாமல் படு விறுவிறுப்பாக உழைத்து வருகிறார்களாம்.
இந்த நிலையில், விஜய் தனது பெரும்பாலான காட்சிகளை நடித்து முடித்துவிட்ட நிலையில், நாளை முதல் டப்பிங் பணியில் ஈடுபட போவதாக கூறப்படுகிறது. ஆம், நாளை முதல் ‘சர்கார்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்க உள்ளது.
நாளை டப்பிங் பணிகள் தொடங்கப்படுவதால், படம் நிச்சயம் தீபாவளிக்கு வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளதால், கடந்த தீபாவளிக்கு மெர்சல் மூலம் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் இந்த தீபாவளிக்கு சர்கார் படம் மூலம் பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட தயாராகி வருகிறார்கள்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...