‘வம்சம்’ சீரியல் புகழ் பிரியங்கா தற்கொலை தொலைக்காட்சி உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கு காரணம் அவரது குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினை தான் என்று கூறப்பட்டது.
இருந்தாலும், பிரியங்காவின் கணவர் அருண் மீது போலீசார் எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல், பிரியங்காவுடன் சீரியலில் நடித்தவர்களும், அவரது கணவர் அருண் குறித்து நல்லபடியாகவே கூறியுள்ளார்கள்.
பிரியங்காவின் கோபமும், அவரது தனிமையால் ஏற்பட்ட மன அழுத்தமும் தான் அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கும் என்றும் அவரது நண்பர்களில் சிலர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், தான் தற்கொலை செய்துகொள்ள இருப்பதை பிரியங்கா சூசகமாக தெரியப்படுத்தியும் அதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்று அவருடன் சீரியலில் நடித்த நடிகை ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
‘வம்சம்’ சீரியலில் பூமிகா என்ற வேடத்தில் நடித்த சந்தியா, பிரியங்கா தற்கொலை குறித்து கூறுகையில், ”எப்போதும் என்னுடன் நன்றாக பேசும் பிரியங்காவின் நடவடிக்கை கடந்த ஒரு மாதமாக கொஞ்சம் சரியில்லை. மேலும், சமீபத்தில் ’ஐ வாண்ட் டூ டை’(I Want to Die) என்ற வார்தைகளுடன் படம் ஒன்றினை தனது வாட்ஸ் அப் டிபியாக வைத்திருந்தார்.
அதை பார்த்ததும், அவளை தொடர்பு கொண்டு அதை மாற்றும்படி நான் கூறினேன். அத்துடன் பிரச்சினை குறித்து அவளிடம் விசாரிக்கையில், நேரில் பார்க்கும் போது கூறுகிறே, என்றார். அவரது கணவரிடம் கேட்டதற்கு, ”அவளிடமே கேட்டுக்குங்க” என்று கூறிவிட்டார்.
ஆனால், பிரியங்காவை இப்படி ஒரு நிலையில் பார்ப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
பிரியங்காவின் டிபியை பார்த்த போதே, அவரிடம் பிரச்சினை குறித்து பேசி அவரை சமாதானப்படுத்தி இருந்தால், ஒருவேளை அவர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு இருப்பாரோ என்னவோ!
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...