இயக்குநர் சுசீந்திரன் தயாரித்து இயக்கியுள்ள ‘அறம் செய்து பழகு’ படத்தின் தலைப்பு சமீபத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் தணிக்கை குழுவிற்கு திரையிடப்பட்ட இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதையடுத்து, இப்படத்தை தீபாவளியன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்த சுசீந்திரன், அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து விட்டார்.
தீபாவளியன்று தான் விஜயின் ‘மெர்சல்’ படமும் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவே, படத்தின் மீது எவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கும் நிலையில், விஜயுடன் மோதும் நோக்கத்தில் தனது படத்தின் ரிலீஸையும் தீபாவளியன்று சுசீந்திரன் அறிவித்திருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.
பொதுவாக, பெரிய ஹீரோக்கள் படம் என்றாலே, சந்து பொந்து, இண்டு இடுக்கு என அனைத்து தியேட்டர்களையும் வலைத்துவிடும் நிலையில், சுசீந்திரனுக்கு தியேட்டர் கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும். அதையும் மீறி படம் தியேட்டர் கிடைத்தாலும், ‘மெர்சல்’ படத்தின் விளம்பரம் உள்ளிட்ட பல போட்டிகளை அவரால் சமாளிக்க முடியுமா? என்று கோடம்பாக்கத்து குருவிகள் பேசி வருகின்றனவாம்.
‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற தலைப்பு வைத்துவிட்டு இதை கூட செய்யலனா எப்படி!
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...