Latest News :

விஜயுடன் மோதும் இயக்குநர் சுசீந்திரன்!
Wednesday August-23 2017

இயக்குநர் சுசீந்திரன் தயாரித்து இயக்கியுள்ள ‘அறம் செய்து பழகு’ படத்தின் தலைப்பு சமீபத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் தணிக்கை குழுவிற்கு திரையிடப்பட்ட இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

 

இதையடுத்து, இப்படத்தை தீபாவளியன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்த சுசீந்திரன், அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து விட்டார்.

 

தீபாவளியன்று தான் விஜயின் ‘மெர்சல்’ படமும் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவே, படத்தின் மீது எவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கும் நிலையில், விஜயுடன் மோதும் நோக்கத்தில் தனது படத்தின் ரிலீஸையும் தீபாவளியன்று சுசீந்திரன் அறிவித்திருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.

 

பொதுவாக, பெரிய ஹீரோக்கள் படம் என்றாலே, சந்து பொந்து, இண்டு இடுக்கு என அனைத்து தியேட்டர்களையும் வலைத்துவிடும் நிலையில், சுசீந்திரனுக்கு தியேட்டர் கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும். அதையும் மீறி படம் தியேட்டர் கிடைத்தாலும், ‘மெர்சல்’ படத்தின் விளம்பரம் உள்ளிட்ட பல போட்டிகளை அவரால் சமாளிக்க முடியுமா? என்று கோடம்பாக்கத்து குருவிகள் பேசி வருகின்றனவாம்.

 

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற தலைப்பு வைத்துவிட்டு இதை கூட செய்யலனா எப்படி!

Related News

311

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery