சின்னத்திரை தொடர்களில் நடிப்பவர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர்களும் பல்வேறு சர்ச்சையான விஷயங்களில் சிக்கி வரும் நிலையில், பிரபல டிவி தொகுப்பாளினி ஒருவர் மோசடி வழக்கில் கைதாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயா டிவியில் முக்கிய தொகுப்பாளராக இருப்பவர் அனிஷா. இவர் தனது கணவருடன் சேர்ந்து ஸ்கை எக்யூப்மெண்ட் என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வந்திருக்கிறார். இதற்கிடையே பிரசாந்த் என்பவரிடம் இருந்து 101 வீட்டு ஏ.சி களை வாங்கிய அனிஷா அதற்கான பில் தொகைக்கு செக் ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால், அவர் கொடுத்த செக் வங்கியில் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகிவிட்டது.
இதையடுத்து, அனிஷாவை தொடர்பு கொண்டு பிரசாந்த் பணம் கேட்க, சரியான முறையில் பதில் சொல்லாத அனிஷா, அவரை மிரட்டும் தோனியிலும் பேசியதாக கூறப்படுகிறது.
இதன் பிறகு கே.கே. நகர் காவல் நிலையத்தில் பிரசாந்த் புகார் தெரிவிக்க, அதன் பேரில் தொகுப்பாளினி அனிஷாவையும், அவரது கணவரின் தம்பியையும் போலீசார் மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர்.
அனிஷாவின் கணவர் தலைமறைவாகியுள்ளதால் அவரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...