பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உடல் நிலை பாதிப்பால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் தற்போது ‘செக்க சிவந்த வானம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.
சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு, தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள பல பகுதிகளில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மணிரத்னத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்ட மணிரத்னம் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...