பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உடல் நிலை பாதிப்பால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் தற்போது ‘செக்க சிவந்த வானம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.
சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு, தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள பல பகுதிகளில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மணிரத்னத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்ட மணிரத்னம் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...