பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உடல் நிலை பாதிப்பால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் தற்போது ‘செக்க சிவந்த வானம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.
சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு, தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள பல பகுதிகளில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மணிரத்னத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்ட மணிரத்னம் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...