5 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்ததோடு, 50 ஆண்டுகள் திமுக-வின் தலைவராகவும் இருக்கும் மு.கருணாநிதி, தற்போது உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து பரவிய தகவலால், கடந்த இரு தினங்களாக தமிழகமே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.
இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மு.கருணாநிதியை அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலர் பார்க்க வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் அஜித்துக்கும், கருணாநிதிக்கும் இடையே நடந்த நிகழ்வு குறித்தும், அப்போது கருணாநிதியை அஜித் சந்தித்தது குறித்தும் ரீவைண்ட் செய்திருக்கும் அவரது ரசிகர்கள் அவற்றை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
அதாவது, கருணாநிதி முதல்வராக இருந்த போது ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற தலைப்பில் திரையுலம் அவருக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்தியது. அதில் கலந்துக்கொண்ட அஜித், “அய்யா எங்களுக்கு அரசியல் வேண்டாம், நடிகனாக இருக்க விடுங்க, நீங்க முடிவு எடுங்க, நாங்க துணை நிற்போம். ஆனால், பலர் அதிகாரத்தை மிஸ்யுஸ் செய்கிறார்கள்” என்று பேச அரங்கமே ஒரு கணம் அதிர்ந்து போனது. ஆனால், அதில் சிலர் அஜித்தின் தைரியத்தை பாராட்டினார்கள்.
கருணாநிதியும், அஜித்தின் தைரியத்தையும், வெளிப்படத்தன்மையையும் பாராட்டியதோடு, தன்னை சந்திக்க வீட்டுக்கு வந்த அஜித்தை அன்போடு தட்டிக்கொடுத்தார்.
இந்த நிகழ்வும், இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்க்கதவர்களு இதோ,
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...