திருமணம் செய்வதாக கூறி பல ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறித்ததாக பிரபல நடிகை ஸ்ருதி கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், தற்போது அந்த நடிகை குறித்து யாரும் அறியாத தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் குடும்பத்தோடு கைதான நடிகை ஸ்ருதி, கடந்த மார்ச் மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
தற்போது தான் கைது செய்யப்பட்டது குறித்து பேட்டி அளித்துள்ள நடிகை ஸ்ருதி, நான் யாரையும் திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றவில்லை, அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகள், என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரணையின் போது தன்னை நிர்வாணமாக்கி, வீடியோ எடுத்த போலீசார், அதனை வைத்து தன்னை மிரட்டினார்கள், என்றும் தெரிவித்திருக்கிறார்.
உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கி போனால், இந்த வழக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து விடுவோம், என்று மிரட்டியதோடு, தன்னை விசாரிக்க வரும் போலீசாரும் தன்னை பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் ஸ்ருதி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...