திருமணம் செய்வதாக கூறி பல ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறித்ததாக பிரபல நடிகை ஸ்ருதி கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், தற்போது அந்த நடிகை குறித்து யாரும் அறியாத தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் குடும்பத்தோடு கைதான நடிகை ஸ்ருதி, கடந்த மார்ச் மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
தற்போது தான் கைது செய்யப்பட்டது குறித்து பேட்டி அளித்துள்ள நடிகை ஸ்ருதி, நான் யாரையும் திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றவில்லை, அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகள், என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரணையின் போது தன்னை நிர்வாணமாக்கி, வீடியோ எடுத்த போலீசார், அதனை வைத்து தன்னை மிரட்டினார்கள், என்றும் தெரிவித்திருக்கிறார்.
உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கி போனால், இந்த வழக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து விடுவோம், என்று மிரட்டியதோடு, தன்னை விசாரிக்க வரும் போலீசாரும் தன்னை பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் ஸ்ருதி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...