தமிழ் சினிமாவின் தற்போதைய மினிமம் கேரண்டி ஹீரோ விஜய் சேதுபதி தான். அவர் ஓகே சொல்லும் கதை தயாரிப்பாளர்களுக்கு எந்தவித பாதகத்தையும் ஏற்படுத்தாததால், தேனீக்கள் மொய்க்கும் மலர் போல, தயாரிப்பாளர்கள் மொய்க்கும் நடிகராகியிருக்கிறார் விஜய் சேதுபதி.
‘விக்ரம் வேதா’ வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவைத் தாண்டி பிற மாநில திரையுலகினர் பார்வையும் விஜய் சேதுபதி மீது பட்டிருக்கிறது. அதன் பயனாகத்தான் சிரஞ்சீவியின் 151 வது படத்தில் அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த நிலையில், ரூ.5 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி, தனது சம்பளத்தை ரூ.7 கோடியாக உயர்த்தியுள்ளாராம். ஆனால் நிலவரப்படி அவர் ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்களாம் என்று கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இந்த விஷயம் விஜய் சேதுபதிக்கும் தெரியும். ஆனால், முதலில் கதை, இயக்குநர் பிறகு தான் சம்பளம் என்பதை கொள்கையாக வைத்துள்ள விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்க ஒரு தயாரிப்பு நிறுவனம் முன் வந்ததாம், அதை நிராகரித்தவர் முதலில் கதை மற்றும் இயக்குநர் பற்றி சொல்லுங்க, என்றாராம்.
ஆக, பிற நடிகர்கள் சம்பளம் உயர்த்தினால் அது தயாரிப்பாளர்களுக்கு தலை வலியாக அமையும். ஆனால், விஜய் சேதிபதியின் சம்பள உயர்வு என்பது காயத்திற்கு போடும் மருந்தாகவே உள்ளது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...