சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக பல நடிகைகள் புகார் கூறி வருகிறார்கள். நடிகை ஸ்ரீ ரெட்டி இந்த விவகாரத்தில் வெளிப்படையாக தன்னை பயன்படுத்தியவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அதிதி ராவ். இவர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘காற்றின் இடைவெளி’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், பட வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு அவர் கண்டிப்பாக முடியாது, என்று கூறி வெளியேறியதால் 8 மாதங்கள் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்தாராம்.
மேலும், 2013 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை நினைத்து அவர் அடிக்கடி வீட்டில் தணியாக இருக்கும் போது அழுவாராம்.
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...