சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக பல நடிகைகள் புகார் கூறி வருகிறார்கள். நடிகை ஸ்ரீ ரெட்டி இந்த விவகாரத்தில் வெளிப்படையாக தன்னை பயன்படுத்தியவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அதிதி ராவ். இவர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘காற்றின் இடைவெளி’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், பட வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு அவர் கண்டிப்பாக முடியாது, என்று கூறி வெளியேறியதால் 8 மாதங்கள் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்தாராம்.
மேலும், 2013 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை நினைத்து அவர் அடிக்கடி வீட்டில் தணியாக இருக்கும் போது அழுவாராம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...