உடல் நிலை பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள விஜயகாந்த், மீண்டும் அரசியல் விவகாரங்களில் ஈடுபட தொடங்கியுள்ளார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது என்று மீண்டும் சுறுசுறுப்பாகியுள்ள அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும், என்று உறுதியாக கூறியவர், ரஜினி மற்றும் கமல் அரசியலுக்கு வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ரஜினி மற்றும் கமல் என நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன். ஏனென்றால் நானும் ஒரு நடிகன் தான். அங்கிருந்து தான் அரசியலுக்கு வந்தேன். என்னைப் பற்றி நடிகர்கள் எந்தக் குறையும் சொல்லவில்லை. எனவே, நானும் அவர்களைப் பற்றியோ அவர்கள் அரசியலுக்கு வருவது பற்றியோ எதுவும் சொல்ல விரும்பவில்லை
விஸ்வரூபம் படத்துக்கு முதன் முதலில் குரல் கொடுத்தவன் நான் தான். ஆனால், அந்தப் பிரச்சினை முடிந்த பிறகு எனக்கு கமல் நன்றி தெரிவிக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
நடிகர்கள் கமல், ரஜினி என் யார் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் முடிவெடுப்பார்கள், அதற்கேற்ப அவர்கள் வாக்களிப்பார்கள்.” என்று தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...