தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, தமிழ்ப் படம் இன்றி தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர், சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப் படம் 2’ வில் ஒரு பாடலுக்கு குத்தாம் போட்டார்.
இந்த நிலையில், தான் நடித்த படங்களில் பேசிய சம்பளத்தை ஒழுங்காக் கொடுக்காமல் தன்னை பலர் ஏமாற்றியிருக்கிறார்கள், என்று நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.
டிவிட்டர் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி, அவ்வபோது ரசிகர்களுடன் உரையாடுவதோடு, சில விஷயங்களில் சண்டையும் போடுவார். இருப்பினும் ரசிகர்களின் கமெண்ட் மற்றும் கேள்விகளுக்கு பதிலும் சொல்லுவார்.
அந்த வகையில், ரசிகர் ஒருவர் ‘நீங்கள் நடித்து வாங்கிய சம்பளத்துக்கு உரிய வருமான வரி செலுத்தி இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, “நான் வ்ரி ஏய்ச்சதில்லை. என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சியிருக்காங்க. பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம். ‘தமிழ்ப் படம் 2’ வில் காட்டுறாங்களே, வெயிலு மழையில் கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம் அதுபோல தான்.” என்று பதில் அளித்தார்.
தயாரிப்பாளர்களிடம் கஸ்தூரி ஏமாந்த கதையை கேட்டு அவர் மீது பரிதாப்பட்ட நெட்டிசன்கள், கஸ்தூரிக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...