Latest News :

பணம் கொடுக்காமல் ஏமாத்துனது தான் அதிகம்! - கவலையில் கஸ்தூரி
Saturday August-04 2018

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, தமிழ்ப் படம் இன்றி தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர், சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப் படம் 2’ வில் ஒரு பாடலுக்கு குத்தாம் போட்டார்.

 

இந்த நிலையில், தான் நடித்த படங்களில் பேசிய சம்பளத்தை ஒழுங்காக் கொடுக்காமல் தன்னை பலர் ஏமாற்றியிருக்கிறார்கள், என்று நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.

 

டிவிட்டர் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி, அவ்வபோது ரசிகர்களுடன் உரையாடுவதோடு, சில விஷயங்களில் சண்டையும் போடுவார். இருப்பினும் ரசிகர்களின் கமெண்ட் மற்றும் கேள்விகளுக்கு பதிலும் சொல்லுவார்.

 

அந்த வகையில், ரசிகர் ஒருவர் ‘நீங்கள் நடித்து வாங்கிய சம்பளத்துக்கு உரிய வருமான வரி செலுத்தி இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, “நான் வ்ரி ஏய்ச்சதில்லை. என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சியிருக்காங்க. பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம். ‘தமிழ்ப் படம் 2’ வில் காட்டுறாங்களே, வெயிலு மழையில் கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம் அதுபோல தான்.” என்று பதில் அளித்தார்.

 

தயாரிப்பாளர்களிடம் கஸ்தூரி ஏமாந்த கதையை கேட்டு அவர் மீது பரிதாப்பட்ட நெட்டிசன்கள், கஸ்தூரிக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

Related News

3183

’இட்லி கடை’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு!
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

வந்த வழியையும், வாழ்ந்த வாழ்க்கையையும் என்றைக்கும் மறக்கக் கூடாது - நடிகர் தனுஷ்
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

Kollywood Stars in A Rhapsody 2025
Monday September-15 2025

The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...

Recent Gallery