தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, தமிழ்ப் படம் இன்றி தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர், சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப் படம் 2’ வில் ஒரு பாடலுக்கு குத்தாம் போட்டார்.
இந்த நிலையில், தான் நடித்த படங்களில் பேசிய சம்பளத்தை ஒழுங்காக் கொடுக்காமல் தன்னை பலர் ஏமாற்றியிருக்கிறார்கள், என்று நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.
டிவிட்டர் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி, அவ்வபோது ரசிகர்களுடன் உரையாடுவதோடு, சில விஷயங்களில் சண்டையும் போடுவார். இருப்பினும் ரசிகர்களின் கமெண்ட் மற்றும் கேள்விகளுக்கு பதிலும் சொல்லுவார்.
அந்த வகையில், ரசிகர் ஒருவர் ‘நீங்கள் நடித்து வாங்கிய சம்பளத்துக்கு உரிய வருமான வரி செலுத்தி இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, “நான் வ்ரி ஏய்ச்சதில்லை. என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சியிருக்காங்க. பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம். ‘தமிழ்ப் படம் 2’ வில் காட்டுறாங்களே, வெயிலு மழையில் கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம் அதுபோல தான்.” என்று பதில் அளித்தார்.
தயாரிப்பாளர்களிடம் கஸ்தூரி ஏமாந்த கதையை கேட்டு அவர் மீது பரிதாப்பட்ட நெட்டிசன்கள், கஸ்தூரிக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...