தேனி மாவட்டத்தை சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை தேனி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகி செல்வம் என்பவர் கலந்துக் கொண்டார். ஆனால், நிர்வாகிகள் கூட்டத்தில் செல்வத்தை பதவியில் இருந்து நீக்கம் செய்வதாக அறிவித்தனர். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட நிர்வாகி செல்வம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செல்வத்தின் தற்கொலை சம்பவம் அப்பகுதி ரஜினி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நிர்வாகிகள் கூட்டத்தில் செல்வத்தை அவமானப்படுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...