Latest News :

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
Wednesday August-08 2018

5 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தவரும், திமுக தலைவருமான முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் 21 குண்டுகள் முழங்க மெரீனா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

கடந்த ஒன்றரை வருடங்களாக வயது முதிர்வு கராணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிப்பால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

 

கருணாநிதியின் இறப்பால் தமிழகமே கண்ணீரில் தத்தளிக்க, அவரது உடல் அடக்கம் செய்வதற்கு மெரீனா கடற்கரையில் இடம் தர முடியாது, என்று தமிழக அரசின் அறிவிப்பு திமுக தொண்டர்களை மட்டும் இன்றி ஒட்டு மொத்த தமிழர்களையும் வேதனை அடைய செய்தது.

 

சிறு வயது முதலே போராட்டத்தையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்ட கருணாநிதியின் வழி அந்தவர்கள் மட்டும் என்ன சும்மா இருப்பார்களா, சட்ட ரீதியிலான போராட்டத்தை கையில் எடுத்தவர்கள், அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.

 

இட ஒத்துக்கீடுக்காக பல போராட்டங்களை நிகழ்த்திய கருணாநிதி, இறுதியாக தனக்கான ஆறடி நிலத்திற்காகவும் போராடி அதில் வெற்றி பெற்றதால், இறப்பிலும் போராடி ஜெயித்த ஓரே தலைவர் என்ற பெருமையோடு இறுதி ஊர்வலத்தை தொடங்கினார்.

 

கடலென திரண்ட தொண்டர்கள் கூட்டத்தில் மிதந்தவாறும், அவர்களது கண்ணீரில் நனைந்தவாறும் அண்ணாவை நோக்கி சென்ற கலைஞர், சுமார் 6.15 மணிக்கு அண்ணா நினைவிடம் வந்தடைந்தார். பிறகு அவரது குடும்பத்தார், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இருதி அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு அவருக்காக தயார் செய்யப்பட்ட பேழையில் அவருக்காக தயார் செய்யப்பட்ட பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டது.

 

பிறகு குழியில் அவரது பேழை இறக்கப்பட்டவுடன், 21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் புதைக்கப்பட்டது.

 

“ஒய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்”

Related News

3222

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery