சினிமா நடிகைகள் அவ்வபோது சில சர்ச்சையான விஷயங்களில் சிக்குவதும், தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சில நடிகைகள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
அதிலும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இதுபோன்ற கொலை சம்பவம் அதிகமக நடக்கிறது. பாகிஸ்தானின் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 15 நடிகைகள் கொல்லப்பட்டு இருப்பதாக ரிப்போர்ட் ஒன்று தெரிவிக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா என்பவர் அவரது கணவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பக்துங்குவா மாகாணத்தை சேர்ந்த ரேஷ்மா, பிரபலமான பாடகியாக இருப்பதோடு, பல நாடகங்களிலும் நடித்து வருகிறார்.

தனது கணவரை பிரிந்து தனது சகோதரருடன் இஸ்லாமாபாத்தில் வசித்து வரும் ரேஷ்மாவை சமீபத்தில் சந்திக்க வந்த அவரது கணவர் அவருடன் சண்டை போட்டுள்ளார். சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றிப்போக, அப்போது அவரது கணவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ரேஷ்மாவை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் ரேஷ்மா சம்பவ உடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தப்பியோடியவருக்கு ரேஷ்மா நான்காவது மனைவி என்று கூறியுள்ளனர்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...