சினிமா நடிகைகள் அவ்வபோது சில சர்ச்சையான விஷயங்களில் சிக்குவதும், தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சில நடிகைகள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
அதிலும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இதுபோன்ற கொலை சம்பவம் அதிகமக நடக்கிறது. பாகிஸ்தானின் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 15 நடிகைகள் கொல்லப்பட்டு இருப்பதாக ரிப்போர்ட் ஒன்று தெரிவிக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா என்பவர் அவரது கணவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பக்துங்குவா மாகாணத்தை சேர்ந்த ரேஷ்மா, பிரபலமான பாடகியாக இருப்பதோடு, பல நாடகங்களிலும் நடித்து வருகிறார்.
தனது கணவரை பிரிந்து தனது சகோதரருடன் இஸ்லாமாபாத்தில் வசித்து வரும் ரேஷ்மாவை சமீபத்தில் சந்திக்க வந்த அவரது கணவர் அவருடன் சண்டை போட்டுள்ளார். சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றிப்போக, அப்போது அவரது கணவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ரேஷ்மாவை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் ரேஷ்மா சம்பவ உடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தப்பியோடியவருக்கு ரேஷ்மா நான்காவது மனைவி என்று கூறியுள்ளனர்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...