சினிமா நடிகைகள் அவ்வபோது சில சர்ச்சையான விஷயங்களில் சிக்குவதும், தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சில நடிகைகள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
அதிலும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இதுபோன்ற கொலை சம்பவம் அதிகமக நடக்கிறது. பாகிஸ்தானின் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 15 நடிகைகள் கொல்லப்பட்டு இருப்பதாக ரிப்போர்ட் ஒன்று தெரிவிக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா என்பவர் அவரது கணவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் பக்துங்குவா மாகாணத்தை சேர்ந்த ரேஷ்மா, பிரபலமான பாடகியாக இருப்பதோடு, பல நாடகங்களிலும் நடித்து வருகிறார்.

தனது கணவரை பிரிந்து தனது சகோதரருடன் இஸ்லாமாபாத்தில் வசித்து வரும் ரேஷ்மாவை சமீபத்தில் சந்திக்க வந்த அவரது கணவர் அவருடன் சண்டை போட்டுள்ளார். சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றிப்போக, அப்போது அவரது கணவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ரேஷ்மாவை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் ரேஷ்மா சம்பவ உடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தப்பியோடியவருக்கு ரேஷ்மா நான்காவது மனைவி என்று கூறியுள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...