கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வருபம் 2’ இன்று (ஆகஸ் 10) வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளிலும் படக்குழுவினர் ஈடுபட்டு வந்த நிலையில், படத்திற்கு எதிராக பிரமிட் சாய்மீரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மனுவில் தங்களிடம் ’மர்மயோகி’ படத்திற்காக பணம் வாங்கிய கமல்ஹாசன், அதை வேறு படத்திற்கு பயன்படுத்தி விட்டதாகவும், எனவே அந்த பணத்தை திருப்பி தரும் வரை ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும், என்று கோரியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, ‘விஸ்வரூபம் 2’ இன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ளிட்ட சில இடங்களில் ‘விஸ்வரூபம் 2’ வெளியானாலும் கடலூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் புதுச்சேரியில் படம் வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே உடன்பாடு ஏற்படாததால் அந்த மாவட்டங்களில் ‘விஸ்வரூபம் 2’ இன்னும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...