கேரளாவில் பெய்து வரும் தொடர் கன மழையால் அங்கு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல இடங்களில் மன் சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளது. மேலும், இதுவரை மழை வெள்ளத்தால் பலியாணவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சமும், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் நிதி அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்கள்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்ததை அறிந்த நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, இருவரும் இணைந்து முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 வழங்குகிறார்கள்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...