Latest News :

கலைகள் மீது அக்கறை இல்லாத அரசு! - இயக்குநர் பா.ரஞ்சித் தாக்கு
Monday August-13 2018

பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், தமிழக அரசுக்கு கலைகள் மீது அக்கறை இல்லை என்று விமர்சித்துள்ளார்.

 

சென்னையின் பிரபல ஓவியர்களில் ஒருவரான ஆண்டனி முனுசாமியின் ஓவியக் கண்காட்சி சென்னை எழும்பூரில் உள்ள லலித்கலா அகடமியில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி தொடங்கிய இந்த ஓவியக் கண்காட்சி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட மறைந்த தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் என உலக அளவில் பிரபலமான பலரது ஓவியங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. முழுக்க முழுக்க பென்சிலை மட்டுமே பயன்படுத்தி இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.

 

ஆக்ஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற்ற இந்த ஓவியக் கண்காட்சியின் தொடக்க விழாவில் பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

 

Antony Munusamy Painting Exhibition

 

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ரஞ்சித், “பிரபலமான ஓவியரான ஆண்டனி முனுசாமி, இந்த துறையில் பல ஆண்டுகளாக இருக்கிறார். எனக்கும் அவருடன் பல ஆண்டுகள் பழக்கம் இருக்கிறது. ஓவியக் கண்காட்சி என்பது ஒவ்வொரு ஒவியருக்கும் கனவாகும். அந்த வகையில் அண்ணன் ஆண்டனி முனுசாமியின் கனவு இது.

 

Antony Munusamy Painting Exhibition

 

ரசிகர்களின் ரசனை என்றுமே மாறவில்லை. அவர்களது ரசனைக்கு ஏற்ப நாம் தான் ஓவியங்களை கொண்டு சேர்க்க வேண்டும். அவர்களுக்கு எந்தமாதிரியான விஷயங்கள் பிடிக்கிறதோ, அதை ஓவியமாக கொடுத்தால் நிச்சயம் மக்களை சென்றடையலாம்.

 

தமிழக அரசுக்கு கலைகள் மீது அக்கறை இல்லாதது பெரும் வருத்தமளிக்கிறது. குறிப்பாக ஓவியக் கலை மீது துளி கூட அக்கறை இல்லை என்பதை, அரசின் ஓவியக் கல்லூரியை பார்த்தாலே தெரிந்துவிடும். ஓவியக் கல்லூரியின் உள்கட்டமைப்பு, தற்போது கட்டப்படும் புதிய கட்டிடம் என்று எந்த விஷயத்திலும் கலையின் பிரதிபலிப்பே இருப்பதில்லை.” என்று தெரிவித்தார்.

 

ஓவியர் ஆண்டனி முனுசாமி, பெண்டாமீடியா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் அனிமேஷன் துறையில் பணிபுரிந்த அனுபவம் பெற்றுள்ளார். தற்போது பல முன்னணி கிராபிக்ஸ் நிறுவனங்களில் அனிமேஷன் துறையில் உயர் நிலையில் இருப்பவர், சட்டம் படித்து அதன் மூலம் ஏழை எளியவர்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்கி வருகிறார்.

 

Antony Munusamy

 

ஓவியத்தை தொழிலாக எடுத்துக் கொண்டாலும் வழக்கறிஞராக சமூக பணிகளிலும் ஈடுபட்டு வரும் ஆண்டனி முனுசாமியின் ஓவியங்களிலும் அவரது சமூக அக்கறை தெரிகிறது.

Related News

3256

ஜித்தன் ரமேஷின் 16 வது படம் ‘ஹிட்டன் கேமரா’ படப்பிடிப்பு தொடங்கியது
Tuesday September-16 2025

ரிலாக்ரோ புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷாம்ஹுன் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் ‘ஹிட்டன் கேமரா’ (HIDDEN CAMERA) அருண்ராஜ் பூத்தனல் இயக்கும் இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கிறார்...

’இட்லி கடை’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு!
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

வந்த வழியையும், வாழ்ந்த வாழ்க்கையையும் என்றைக்கும் மறக்கக் கூடாது - நடிகர் தனுஷ்
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

Recent Gallery