விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியாக உள்ளது. பொதுவாக பெரிய படங்கள் வெளியாகும் போது வேறு எந்த படங்களையும் வெளியிட தயாரிப்பாளர்கள் முன் வருவதில்லை. காரணம், அனைத்து திரையரங்கங்களையும் அப்படங்கள் ஆட்கொண்டு விடும்.
ஆனால், தீபாவளியன்று சுசீந்திரன் இயக்கி தயாரித்துள்ள ‘நெஞ்சத்தில் துணிவிருந்தால்’ படமும் வெளியாகிறது. இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து விஜயுடன் சுசீந்திரன் போட்டி போடுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், “தான் விஜயுடன் போட்டி போடவில்லை. மெர்சல் ரிலீஸுடன் நானும் வருகிறேன். 2013 ஆம் ஆரம்பம் வெளியான போது பாண்டிய நாடு வெளியானது. இரண்டு படமும் வெற்றி பெற்றது. அதனால் நான் யாருடனும் போட்டியிடவில்லை, என்று சுசீந்திரன் விளக்கம் தெரிவித்தார்.
இந்த நிலையில், ’ஐய்யனார் வீதி’ படத்தை தயாரித்து அதில் வில்லனாக நடித்த செந்தில்வேல், தனது பேஸ்புக் பக்கத்தில், சுசீந்திரனின் கடிதத்தை வெளியிட்டு, “எனது படம் ‘பாகுபலி2’ வெளியான போது ரிலீஸ் ஆனது. அப்போது நானும் இப்படித்தான் மிரட்டப் பட்டேன். தற்போது சுசீந்திரனுக்கும் அந்த நிலை ஏற்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்படி என்றால் இயக்குநர் சுசீந்திரன் மிரட்டப்பட்டிருப்பாரோ, அப்படி மிரட்டப்பட்டிருந்தால், அவரை மிரட்டியவர்கள் யாராக இருக்கும், போன்ற கேள்விகள் கோடம்பாக்கத்தில் வலம் வர தொடங்கியுள்ளன.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...