Latest News :

'மெர்சல்’ உடன் போட்டி - மிரட்டப்பட்டாரா இயக்குநர் சுசீந்திரன்?
Thursday August-24 2017

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியாக உள்ளது. பொதுவாக பெரிய படங்கள் வெளியாகும் போது வேறு எந்த படங்களையும் வெளியிட தயாரிப்பாளர்கள் முன் வருவதில்லை. காரணம், அனைத்து திரையரங்கங்களையும் அப்படங்கள் ஆட்கொண்டு விடும்.

 

ஆனால், தீபாவளியன்று சுசீந்திரன் இயக்கி தயாரித்துள்ள ‘நெஞ்சத்தில் துணிவிருந்தால்’ படமும் வெளியாகிறது. இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து விஜயுடன் சுசீந்திரன் போட்டி போடுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், “தான் விஜயுடன் போட்டி போடவில்லை. மெர்சல் ரிலீஸுடன் நானும் வருகிறேன். 2013 ஆம் ஆரம்பம் வெளியான போது பாண்டிய நாடு வெளியானது. இரண்டு படமும் வெற்றி பெற்றது. அதனால் நான் யாருடனும் போட்டியிடவில்லை, என்று சுசீந்திரன் விளக்கம் தெரிவித்தார்.

 

இந்த நிலையில், ’ஐய்யனார் வீதி’ படத்தை தயாரித்து அதில் வில்லனாக நடித்த செந்தில்வேல், தனது பேஸ்புக் பக்கத்தில், சுசீந்திரனின் கடிதத்தை வெளியிட்டு, “எனது படம் ‘பாகுபலி2’ வெளியான போது ரிலீஸ் ஆனது. அப்போது நானும் இப்படித்தான் மிரட்டப் பட்டேன். தற்போது சுசீந்திரனுக்கும் அந்த நிலை ஏற்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அப்படி என்றால் இயக்குநர் சுசீந்திரன் மிரட்டப்பட்டிருப்பாரோ, அப்படி மிரட்டப்பட்டிருந்தால், அவரை மிரட்டியவர்கள் யாராக இருக்கும், போன்ற கேள்விகள் கோடம்பாக்கத்தில் வலம் வர தொடங்கியுள்ளன.

Related News

326

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery