Latest News :

'மெர்சல்’ உடன் போட்டி - மிரட்டப்பட்டாரா இயக்குநர் சுசீந்திரன்?
Thursday August-24 2017

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியாக உள்ளது. பொதுவாக பெரிய படங்கள் வெளியாகும் போது வேறு எந்த படங்களையும் வெளியிட தயாரிப்பாளர்கள் முன் வருவதில்லை. காரணம், அனைத்து திரையரங்கங்களையும் அப்படங்கள் ஆட்கொண்டு விடும்.

 

ஆனால், தீபாவளியன்று சுசீந்திரன் இயக்கி தயாரித்துள்ள ‘நெஞ்சத்தில் துணிவிருந்தால்’ படமும் வெளியாகிறது. இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து விஜயுடன் சுசீந்திரன் போட்டி போடுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், “தான் விஜயுடன் போட்டி போடவில்லை. மெர்சல் ரிலீஸுடன் நானும் வருகிறேன். 2013 ஆம் ஆரம்பம் வெளியான போது பாண்டிய நாடு வெளியானது. இரண்டு படமும் வெற்றி பெற்றது. அதனால் நான் யாருடனும் போட்டியிடவில்லை, என்று சுசீந்திரன் விளக்கம் தெரிவித்தார்.

 

இந்த நிலையில், ’ஐய்யனார் வீதி’ படத்தை தயாரித்து அதில் வில்லனாக நடித்த செந்தில்வேல், தனது பேஸ்புக் பக்கத்தில், சுசீந்திரனின் கடிதத்தை வெளியிட்டு, “எனது படம் ‘பாகுபலி2’ வெளியான போது ரிலீஸ் ஆனது. அப்போது நானும் இப்படித்தான் மிரட்டப் பட்டேன். தற்போது சுசீந்திரனுக்கும் அந்த நிலை ஏற்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அப்படி என்றால் இயக்குநர் சுசீந்திரன் மிரட்டப்பட்டிருப்பாரோ, அப்படி மிரட்டப்பட்டிருந்தால், அவரை மிரட்டியவர்கள் யாராக இருக்கும், போன்ற கேள்விகள் கோடம்பாக்கத்தில் வலம் வர தொடங்கியுள்ளன.

Related News

326

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery