மறைந்த திமுக தலைவர் மு.கருணநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி திரைத்துறை சார்பில் நேற்று சென்னையில் நடத்தப்பட்டது. நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பல திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் இதில் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், கருணாநிதியின் இறுதிச் சடங்கில் தமிழக முதல்வர் பங்கேற்காததற்கு கண்டனம் தெரிவித்ததோடு, மெரீனாவிடல் இடம் வழங்க மறுத்த தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுக்கு மேல் முறையீடு செய்திருந்தால் தானே போராடியிருப்பேன், என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் பேச்சுக்கு பதில் அளித்திருக்கும் அமைச்சர் ஜெயக்குமார், “கருணாநிதியால் தான் அதிமுக உருவானது என்று தவறான கருத்தை ரஜினி கூறியுள்ளார். முதலில் மறைந்த ஒரு தலைவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியில் இதுபோல் அரசியல் பேசுவது ஆரோக்கியமான முறையல்ல.
அதிலும் அரசியலே தெரியாமல், வரலாறே தெரியாமல் ரஜினி வாய் புளித்தது மாங்காய் புளித்தது என்று பேசியது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
இது போல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்த போது ரஜினி இப்படி பேசுவதற்கு தைரியம் இருந்ததா, அப்போது ஓடி ஒளிந்துக் கொண்டார் ரஜினி. அவர்கள் முன்னால் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது.” என்று பகிரங்கமாக மிரட்டும் வகையில் பேசினார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...