தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த சத்யராஜ், 125-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நிலையில், தற்போது அப்பா உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ‘பாகுபலி’ படத்தில் அவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் பெரும் பாராட்டுப் பெற்றது.
இந்த நிலையில், தொடர்ந்து பல அப்பா கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதாக தெரிவித்திருக்கும் சத்யராஜ், அப்பா வேடங்களில் நடிப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் நடைபெறும் புத்தக திருவிழாவில் கலந்துக் கொண்டு பேசிய சத்யராஜ், ”வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்து நிறைய சம்பாதித்து விட்டேன். போதும் இனியும் நாம் நடித்தால் அப்பா வேடத்தில்தான் நடிக்க வேண்டும். அப்பா வேடத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை.
இப்படி ஒதுங்கி இருக்கும் போதுதான் தெலுங்கு படம் ஒன்றில் என்னை நடிக்க கேட்டார்கள். தெலுங்கில் பெரிய நடிகர் கோபிசந்த் அவருக்கு அப்பாவாக நடிக்க அழைத்தார்கள். படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர், டெக்னீசியன்கள் என அனைவரும் தமிழர்கள். ஆனால் படம்தான் தெலுங்குபடம்.
படத்தின் கதாநாயகி நடிகை திரிஷா. என்னை மாமாகாரு என்று படத்தில் கூப்பிட்டபோதே செத்தேன். போதுமடா சாமி இனி அப்பா வேடம் எல்லாம் வேண்டாம் என நினைத்தேன்.
இடையில் ‘பாகுபலி’ படத்தில் கட்டப்பா வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடித்தேன். பெயரும் கிடைத்தது. இத்தோடு சரி என்று நினைத்து ஒதுங்கி இருக்கிறேன். நடித்து சம்பாதித்தது போதும். சந்தோஷமாக இருக்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...