நடிகரும் இயக்குநருமான பார்த்திபனிடம் அரசியல் தலைவர் ஒருவர், தனது கட்சியில் சேர்ந்தால் ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசிய தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் என பல திரையுலக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் பார்த்திபன் கலந்துக் கொண்டு சினிமா பயணம் என்ற தலைப்பில் பேசினார். அப்போது தான் எப்படி சினிமாவுக்குள் வந்தேன், என்பது குறித்து பேசிய அவர், அரசியல் தலைவர் ஒருவர் தனக்கு ரூ.100 கோடி தருவதாகவும், அவர் கட்சியில் இணைந்துக் கொள்ளுமாறும் பேரம் பேசினார். ஆனால், அரசியல் தெரியாததால் நான் அந்த ஆபரை ஏற்கவில்லை, என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது தன்னிடம் 60 கதைகள் ரெடியாக இருப்பதாக கூறிய பார்த்திபன், அந்த கதைகளை படமாக்க தனக்கு ரூ.600 கோடி தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...