நடிகரும் இயக்குநருமான பார்த்திபனிடம் அரசியல் தலைவர் ஒருவர், தனது கட்சியில் சேர்ந்தால் ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசிய தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் என பல திரையுலக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் பார்த்திபன் கலந்துக் கொண்டு சினிமா பயணம் என்ற தலைப்பில் பேசினார். அப்போது தான் எப்படி சினிமாவுக்குள் வந்தேன், என்பது குறித்து பேசிய அவர், அரசியல் தலைவர் ஒருவர் தனக்கு ரூ.100 கோடி தருவதாகவும், அவர் கட்சியில் இணைந்துக் கொள்ளுமாறும் பேரம் பேசினார். ஆனால், அரசியல் தெரியாததால் நான் அந்த ஆபரை ஏற்கவில்லை, என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது தன்னிடம் 60 கதைகள் ரெடியாக இருப்பதாக கூறிய பார்த்திபன், அந்த கதைகளை படமாக்க தனக்கு ரூ.600 கோடி தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...