‘ஏஏஏ’ படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து படம் எடுக்க இனி யாரும் வர மாட்டாரகள், என்று ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே நினைத்தது. ஆனால், மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்பு காட்டிய ஈடுபாடும், ஒத்துழைப்பு குறித்து கேள்விட்ட சினிமா தயாரிப்பாளர்கள் பலர் தற்போது சிம்புவை வைத்து படம் தயாரிக்க முன்வருகிறார்கள்.
அதன்படி, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்கும் சிம்பு, அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் சில படங்களில் நடிக்க இருக்கும் அவர் இரண்டு வருடங்களுக்கு இப்போதே பிஸியாம்.
இதற்கிடையே, ‘வல்லவன்’ படத்தின் போது நயந்தாராவை காதலித்து வந்த சிம்பு, அவருடன் லிப் டூ லிப் முத்தமிடுவது போன்ற புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிம்புவின் காதலை நயந்தாரா விட்டிய பிறகே இந்த புகைப்படம் லீக்கானதால் இது சிம்புவின் வேலை தான் என்று பலர் கூறினார்கள்.
ஆனால், இது குறித்து அப்போது சிம்பு எந்த விளக்கமும் கூறவில்லை, அதேபோல், நயந்தாரா தரப்பிலும் இது பற்றி எதுவும் பேசவில்லை.
இந்த நிலையில், நயந்தாராவுடனான லிப் டூ லிப் முத்தமிடும் புகைப்படம் வெளியானது குறித்து தற்போது சிம்பு மனம் திறந்துள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், ”துபாயின் புது கேமரா வாங்கிய போது அந்த புகைப்படம் எடுத்தோம், ஆனால், அதை யாரோ லீக் செய்துவிட்டார்கள். அந்த நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது, என்னால் ஒரு பெண் பெயர் கெடுகின்றதே என்று, நான் எந்த பெண்ணிடமும் அவர்கள் அனுமதியில்லாமல் தொட்டது கூட இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...