ரஜினிகாந்த் நடிப்பில், ரஞ்சித் இயக்கும் ‘காலா’ படத்தில் சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் ரஜினி முன்னிலையில் அருள்தாஸ் மற்றும் குழுவினர் பேசிக்கொண்டிருப்பது போலவும், அப்போது ஜீப் ஒன்று வேகமாக வருவது போன்றும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது வேகமாக வந்த ஜீப், எதிர்பாரதவிதமாக அருள்தாஸ் மீது மோதியதில், அவரது இடது கால் விரல்கள் மீது ஜீப்பியின் டயர் ஏறி இறங்கியது. இதனால் அவர் வலியால் துடித்தார்.
உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, 10 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளனர்.
விபத்து ஏற்பட்ட அருள்தாஸ், ‘நான் மகான் அல்ல’, ‘நீர்ப்பறவை’, ‘சூது கவ்வும்’, ‘பாபநாசம்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
ஏற்கனவே காலா படப்பிடிப்பு விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டிருப்பது படக்குழுவினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...