கடந்த இரண்டு வாரங்களாக பெய்த பேய் மழையால் கேரளா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 370 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள அம்மாநிலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி அளவிலான சேதம் ஏற்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தற்போது மழை நின்றாலும், தேங்கியிருக்கும் வெள்ள நீரை வெளியேற்றுவது பெரும் சவாலாக அமைந்திருக்கும் நிலையில், பல்வேறு தரப்பினர் கேரளாவுக்கு நிதி உதவி செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் கேரளாவுக்கு நிதி வழங்கி வருகிறார்கள். முன்னணி நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சித்தார்த், விஷால், கார்த்தி சூர்யா, நடிகைகள் நயந்தாரா, கீர்த்தி சுரேஷ் என்று ஏராளமானவர்கள் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு நிதி வழங்கியிருந்தாலும், இவர்களில் யாரும் தனிப்பட்ட முறையில் ரூ.1 கோடி வழங்கவில்லை. அதே சமயம், தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் ரூ.1 கோடி நிதி வழங்கியிருந்தார்கள்.
இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த தொகைக்கான காசோலையை வரும் சனிக்கிழமையன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து அவர் வழங்க இருக்கிறார்.

இதன் மூலம், கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதி உதவி செய்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை ராகவா லாரன்ஸ் பெற்றிருக்கிறார்.
இதுவரை வழங்கிய நிதியில் தமிழ் சினிமா நடிகர்களில் நடிகர் விஜய் ரூ.70 லட்சம் வழங்கியதே அதிகமான தொகையாக இருந்த நிலையில், தற்போது லாரன்ஸ் அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...