கடந்த இரண்டு வாரங்களாக பெய்த பேய் மழையால் கேரளா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 370 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள அம்மாநிலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி அளவிலான சேதம் ஏற்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தற்போது மழை நின்றாலும், தேங்கியிருக்கும் வெள்ள நீரை வெளியேற்றுவது பெரும் சவாலாக அமைந்திருக்கும் நிலையில், பல்வேறு தரப்பினர் கேரளாவுக்கு நிதி உதவி செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் கேரளாவுக்கு நிதி வழங்கி வருகிறார்கள். முன்னணி நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சித்தார்த், விஷால், கார்த்தி சூர்யா, நடிகைகள் நயந்தாரா, கீர்த்தி சுரேஷ் என்று ஏராளமானவர்கள் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு நிதி வழங்கியிருந்தாலும், இவர்களில் யாரும் தனிப்பட்ட முறையில் ரூ.1 கோடி வழங்கவில்லை. அதே சமயம், தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் ரூ.1 கோடி நிதி வழங்கியிருந்தார்கள்.
இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த தொகைக்கான காசோலையை வரும் சனிக்கிழமையன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து அவர் வழங்க இருக்கிறார்.
இதன் மூலம், கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதி உதவி செய்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை ராகவா லாரன்ஸ் பெற்றிருக்கிறார்.
இதுவரை வழங்கிய நிதியில் தமிழ் சினிமா நடிகர்களில் நடிகர் விஜய் ரூ.70 லட்சம் வழங்கியதே அதிகமான தொகையாக இருந்த நிலையில், தற்போது லாரன்ஸ் அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...