தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களில் இடத்தை பிடித்து விட்டார். தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் சிவகார்த்திகேயனும் தற்போது ஒருவராக திகழ்கிறார்.
சிவகார்த்திகேயன் படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங்கை பார்த்து பல மாஸ் ஹீரோக்களும் ஆச்சரியப்படும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமான படங்களாக உருவாகிறது.
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கும் சிவகார்த்திகேயன், அதன் மூலம் சொந்தமாக திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அவரது முதல் தயாரிப்பாக ‘கனா’ படம் உருவாகுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் படமாகும். மேலும், இந்திய சினிமா வரலாற்றில் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியாக இருக்கும் முதல் திரைப்படமும் இது தான்.
இந்த நிலையில், ‘கனா’ படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களை தயாரிக்க முடிவு செய்திருக்கும் சிவகார்த்திகேயன், தான் அடுத்து தயாரிக்கும் படத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகர் ஒருவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமடைந்த ரியோவை தான் சிவகார்த்திகேயன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்த இருக்கிறார். தற்போது இப்படத்திற்கான ஆரம்ப பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விரைவில் இப்படம் குறித்த முழு விபரம் அறிவிக்கப்பட உள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...