பாலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ள அஜய் தேவ்கனும், நடிகை கஜோலும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்கள். கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இவர்களுக்கு நியாசா என்ற மகளும், யுக் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், தனது திருமண வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகை கஜோல், ஹனிமூனில் இருந்து அஜய் தேவ்கன் பாதியிலேயே ஓட்டம் பிடித்த கதையை சொல்லியிருக்கிறார்.
இது குறித்து கூறிய கஜோல், ”திருமணம் செய்யும் முன்பே நான் அஜய்க்கு ஒரு நிபந்தனை விதித்தேன். அதாவது இரண்டு மாதங்கள் ஹனிமூன் செல்ல வேண்டும் என்பது தான் அது. அவரும் சரி என்று கூறினார். ஹனிமூன் போதே உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கு அஜயும் சம்மதித்தார்.
அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு சென்ற நாங்கள் அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் வேகாஸ் என்று ஒவ்வொரு இடமாக சென்றோம். பின்னர் கிரிஸுக்கு சென்றோம். அதற்குள் 40 நாட்கள் ஓடிவிட்ட நிலையில், அஜய் அதற்குள்ளாகவே சோர்வடைந்துவிட்டார். ஒரு நாள் காலை, என்னை எழுப்பி தனக்கு காய்ச்சல் மற்றும் தலைவலியாக இருப்பதாக கூறியவர், வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று கூறினார்.
காய்ச்சல் தலைவலி என்றால் மருந்து வாங்கித் தருகிறேன், என்று நான் கூற, ஆனால் அஜய் தொடர்ந்து தனக்கு உடம்பு சரியில்லை என்று மீண்டும் மீண்டும் கூறியவர், ஹனிமூனை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு போவதிலேயே குறியாக இருந்தார்.
இதையடுத்து தங்களது ஹனிமூனை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியா கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.” என்று தெரிவித்தார்.
ரிலாக்ரோ புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷாம்ஹுன் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் ‘ஹிட்டன் கேமரா’ (HIDDEN CAMERA) அருண்ராஜ் பூத்தனல் இயக்கும் இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கிறார்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...