தொடர் வெற்றிப் படங்களை தயாரித்து வரும் சி.வி.குமார், தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிக்கும் புதுப்படத்திற்கு ‘ஜாங்கோ’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்.
இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகவும், ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய மனோ கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தில், சதிஷ் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மிர்னாலினி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், ஆர்.ஜே.ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளசி, சந்தானபாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். ராதாகிருஷ்னன் தனபால் படத்தொகுப்பு செய்ய, கோபி ஆனந்த் கலையை நிர்மாணிக்கிறார். மீனாக்ஷி ஷ்ரிதரன் காஸ்ட்யும் டிசைனராக பணியாற்ற, ஹரி தினேஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பாளராக நிகில் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக இளைஞர் அணி தலைவரும், மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான சதிஷ்குமார் போன்ஸ்லே கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...