தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் என்றாலே ரசிகர்கள் மகிழ்ச்சியடைவதோடு, திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கூட பெரும் உற்சாகமடைந்து விடுகிறார்கள்.
தற்போது இருக்கும் ஹீரோக்களில் சிறந்த ஓபனிங் உள்ள ஹீரோக்களின் வரிசையில் சிவகார்த்திகேயனும் இடம் பிடித்திருப்பதால், அவரது படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களும் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டும் வருகிறது.
இப்படி உள்ளூரில் உயந்த சிவகார்த்திகேயன், தற்போது வெளிநாடுகளிலும் தனது வசூல் வேட்டையை தொடங்க பிள்ளையார் சுழி போட்டுவிட்டார். ஆம், பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மூன்றாவது படமான ‘சீமராஜா’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டிலும் மிகப்பெரிய அளவில் படம் வெளியாகப் போகிறது.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா ஆகியோரது படங்கள் மட்டும் ஐரோப்பிய நாடான போலந்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படமும் அந்நாட்டில் வெளியாக உள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளிலும் தனது மாஸை சிவகார்த்திகேயன் காட்டப் போகிறார்.
ஆயுதபூஜையை முன்னிட்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ‘சீமராஜா’ உலகம் முழுவதும் வெளியாகிறது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...