Latest News :

யாரை பார்த்தும் எனக்கு பயம் இல்லை! - சிவகார்த்திகேயன்
Monday September-03 2018

மூன்றாவது முறையாக இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘சீமராஜா’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதை போல, சமீபத்தில் வெளியான டிரைலரும் வரவேற்பு பெற்றுள்ளது. படம் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

இதற்கிடையே, டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமந்தா, சிவகார்த்திகேயன், சிம்ரன், சூரி, இசையமைப்பாளட் டி.இமான், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் முத்துராஜ், இயக்குநர் பொன்ராம், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.

 

Seemaraja

 

நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “பொன்ராம் சாரின் இயக்கத்தில் நான் நடிக்கும் மூன்றாவது படம் ‘சீமராஜா’. எங்கள் படத்தில் என்ன இருக்கும் என்று ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால், அதையும் தாண்டி எதாவது புதிதாக காட்ட வேண்டும் என்று பொன்ராம் சார் யோசித்தார். அதன்படி தான் இந்த படத்தில் ஒரு போர்ஷன் வருகிறது. அது ரொம்பவே வித்தியாசமாக இருக்கும், அதே சமயம் எங்களிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் காமெடிக்கும் படத்தில் பஞ்சமிருக்காது.

 

நான் முதல் முதலில் ராஜா கெட்டப்பில் நடித்திருக்கிறேன். அதுவும் ஒரு தமிழ் மன்னனாக நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதுபோன்ற வாய்ப்புகள் அதிகமாகவும், இவ்வளவு சீக்கிரமாகவும் கிடைக்காத ஒன்று. ராஜா கெட்டப்பில் நான் பேசும் வசனங்கள் எல்லாம் ரொம்ப சிறப்பாக வந்திருக்கிறது. இதில் வரும் சண்டைக்காட்சிகள் குழந்தைகளுக்கு பிடிக்கும் விதத்தில் இருக்கும். படத்தில் சண்டை இருக்கும், ஆனால் ரத்தம் இருக்காது, அதில் இயக்குநர் பொன்ராம் ரொம்பவே தெளிவாக இருந்தார்.

 

நான் யாரையும் போட்டியாக பார்ப்பதில்லை. எனக்கு நான் தான் போட்டி. அப்படி தான் நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். யாரை பார்த்தும் எனக்கு பயமும் இல்லை, பொறாமையும் இல்லை. என் வேலையை நான் சரியாக செய்ய வேண்டும், அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.” என்றார்.

 

சமந்தா பேசும் போது, “ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் எனக்கு கொஞ்சம் பயம் இருந்துட்டே இருக்கும். ஆனால் இந்த படம் ரிலீஸுக்கு எனக்கு சுத்தமா பயமே இல்லை. படத்தின் வெற்றி முன்பே எழுதப்பட்டு விட்டது. கிராமத்து படம் என்றாலே அது பொன்ராம் சார், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் கோட்டை. அதில் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய மொத்த குழுவுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.” என்றார்.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் பொன்ராம், நடிகர் சூரி, நடிகை சிம்ரன் உள்ளிட்ட அனைவரும் பேசினார்கள்.

Related News

3363

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

திரைப்பட தயாரிப்பில் இறங்கிய 'நாய்ஸ் அண்டு கிரைன்ஸ்'!
Saturday July-12 2025

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’!
Saturday July-12 2025

‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

Recent Gallery