திமுக-வில் இருந்த குஷ்பு சில கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் இருந்தாலும் அவ்வபோது திமுக குறித்து கருத்துக்களை குஷ்பு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், கருணாநிதிக்கும், தனக்கும் இடையே இருந்த உறவை சில கொச்சைப்படுத்தியதாக குஷ்பு வேதனை தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் புகழ் வணக்கம் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய குஷ்பு, தமிழ்நாட்டு மக்களுக்காக இறுதி வரை போராடிய கலைஞர் கருணாநிதியிடம் இருந்து, தாம் தமிழையும், அரசியலையும் கற்றுக்கொண்டடேன் என்றார்.
தமக்கு தமிழ்மொழி மீதான பற்று வருவதற்கு காரணமே கருணாநிதி என்றும், மரியாதை என்பதற்கான அர்த்தத்தையும் கருணாநிதியிடம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். தனக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்ட கொள்கைகளை கற்றுக் கொடுத்ததும் கருணாநிதிதான் என்றார்.
மேலும், தமக்கும் கருணாநிதிக்கும் இடையிலான உறவு தந்தை மகள் போன்றது என்று குறிப்பிட்ட குஷ்பு, ஆனால், அந்த உறவு கொச்சைப்படுத்தப்பட்டதாக கூறி, தனது வேதனையை தெரிவித்தார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...