Latest News :

‘எந்திரன்’ கதை திருட்டு வழக்கு! - இயக்குநர் ஷங்கருக்கு அபராதம்
Tuesday September-04 2018

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராஜ் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு வெளியான படம் ‘எந்திரன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தின் கதை தன்னுடையது என்று கூறி, எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடான் என்பவர் கடந்த 2010 ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

1996 ஆம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தான் எழுதிய தொடர் கதையை, என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குநர் ஷங்கர் ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, தனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், என்று ஆரூர் தமிழ்நாடான் மனுவில் தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கூடுதல் அவகாசம் கேட்டு இயக்குநர் ஷங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

 

இந்த நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்குமாறு, அவர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

 

ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, கால அவகாசம் கேட்ட இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், அந்த அபராத தொகையை புளூ கிராஸ் அமைப்புக்கு வழங்குமாறும் உத்தரவிட்டவர், விசாரணையை 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related News

3369

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

கூலி படத்தின் “மோனிகா...” பாடலும், சக்தி மசாலாவின் விளம்பர யுத்தியும்!
Wednesday September-17 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘மா வந்தே’ முதல் பார்வை!
Wednesday September-17 2025

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery