ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராஜ் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு வெளியான படம் ‘எந்திரன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தின் கதை தன்னுடையது என்று கூறி, எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடான் என்பவர் கடந்த 2010 ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
1996 ஆம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தான் எழுதிய தொடர் கதையை, என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குநர் ஷங்கர் ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, தனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், என்று ஆரூர் தமிழ்நாடான் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கூடுதல் அவகாசம் கேட்டு இயக்குநர் ஷங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்குமாறு, அவர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, கால அவகாசம் கேட்ட இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், அந்த அபராத தொகையை புளூ கிராஸ் அமைப்புக்கு வழங்குமாறும் உத்தரவிட்டவர், விசாரணையை 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...