’வீரம்’ ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று சிவாவுடன் தொடர்ந்து மூன்று படங்கள் இணைந்து பணியாற்றிய அஜித், இனியும் அவருடன் இணைந்து பணியாற்றுவது நல்லதல்ல, என்று அவரது ரசிகர்கள் நினைப்பது மட்டும் இன்றி, தங்களது எண்ணத்தை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு ‘விவேகம்’ அவர்களை ரொம்பவே விரக்தியடைய செய்துள்ளது.
இதற்கிடையே, அஜித்தின் அடுத்த படம் மற்றும் அதன் இயக்குநர் குறித்த தகவல் வெளியாகிறது. அந்த இயக்குநர் யார்? என்பது தெரிந்தால் அஜித் ரசிகர்கள் “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...” என்ற பாடலை பாடினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
ஆம், அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குநரும் சிவா தானாம். விஜயின் ‘மெர்சல்’ படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறதாம்.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...