சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டிவி நடிகர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்ப் படங்கள் பலவற்றி நடித்திருக்கும் நடிகர் சித்தார்த்தின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’யாகாவாராயினும் நா காக்க’ போன்று சில படங்களில் துணை நடிகராக நடித்தவர் சித்தார்த். இவரும் இவரது மனைவி ஸ்மிரிஜாவும் நேற்றிரவு ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் வீட்டிற்கு வந்த ஸ்மிரிஜா ஒரு அறையில் சென்று கதவை பூட்டியிருக்கிறார், இதனால் சித்தார்த் வெளியே தூங்கியிருக்கிறார்.
காலை வெகுநேரம் ஆகியும் தன்னுடைய மனைவி கதவை திறக்காததால் சித்தார்த் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல் துறை சித்தார்த் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்த்தால் அவரது மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
சித்தார்த்துக்கும், ஸ்மிரிஜாவுக்கும் திருமணமாகை 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...