Latest News :

தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் ராக்கெட் ராமநாதன் மரணம்!
Wednesday September-05 2018

தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் மற்றும் காமெடி நடிகரான ராக்கெட் ராமநாதன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

 

மயில்சாமி, விவேக் தொடங்கி தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக உள்ள சிவகார்த்திகேயன் என அபலர் மிமிக்ரி என்று சொல்லக்கூடிய பலகுரல்களில் பேசக்கூடிய திறன் மூலமாகவே தொலைக்காட்சிகளில் பிரபலமாகி அதன் மூலம் சினிமாவில் பிரபலமானர்கள். ஆனால், இவர்களுக்கு முன்னதாக, அதாவது தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னன் என்று பெயர் எடுத்தவர் ராக்கெட் ராமநாதன்.

 

சென்னை தொலைக்காட்சியிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பல குரல்களில் பேசி நிகழ்ச்சி நடத்தி வந்த இவர், ’ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது’, ’ஸ்பரிசம்’, ’வளர்த்தகடா’, ’மண்சோறு’, ’கோயில் யானை’ உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழக அரசின் கலைமாமணி நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகளையும் பெற்றவர். 

 

1970-களில் அமெரிக்கா ராக்கெட் விட்ட சமயம், கவிஞர் வில்லிப்புத்தன், ‘ராக்கெட்’ என்று அடைமொழி வைத்துக்கொள், கொஞ்சம் வேகமாக இருக்கும் என்று சொல்ல, அன்றிலிருந்து ‘ராக்கெட் ராமனாதன்’ ஆனார்.

 

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராக்கெட் ராமநாதன் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த இவருக்கு பானுமதி என்ற மனைவியும், சாய்பாலா என்ற மகளும், சாய்குரு பாலாஜி என்ற மகனும் உள்ளனர். 

Related News

3377

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery