ரூ.300 கோடி பட்ஜெட்டில் ‘சங்கமித்ரா’ என்ற படத்தை இயக்க இருக்கும் சுந்தர்.சி, ஓவியாவை வைத்து புது படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்திற்காக பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டுவிட்டாலும், படத்தின் முக்கிய கதாபாத்திரமான சங்கமித்ரா வேடத்தில் நடிக்க பொருத்தமான நடிகை இதுவரை கிடைக்காததால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘கலகலப்பு’ இரண்டாம் பாகத்தை ‘கலகலப்பு-2’ என்ற தலைப்பில் சுந்தர்.சி இயக்க இருப்பதாகவும், அதற்கான கதையை அவர் எழுதிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ‘சங்கமித்ரா’ படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், ‘கலகலப்பு-2’ படத்தையும் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்த விமல், சந்தானம், அஞ்சலி ஆகியோருடன், பிக் பாஸ் மூலம் பிரபலமாக உள்ள ஓவியாவும் இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...