தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் இரண்டில், மகத் தான் வில்லனாக தெரிந்து வந்த நிலையில், இன்று ஒளிபரப்பாகும் எபிசோட்டில் மும்தாஜின் முகத்திரை கிழிய உள்ளது.
மும்தாஜை, “அந்த பொம்பள மோசமனவ” என்று கூறியதால், கமலிடம் வாங்கிக்கட்டிக்கொண்டதோடு, பிக் பாஸ் போட்டியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார் மகத். ஆனால், அப்போதே மகத், மும்தாஜ் குறித்து பல உண்மைகளை கூறினாலும், அவர் மீது இருந்த கோபத்தால் ரசிகர்கள் அவர் சொல்வதை எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அதற்கு ஏற்றவாறு, எப்போதும் அமைதியின் சுரூபமாக இருந்த மும்தாஜ், எதற்கு எடுத்தாலும் சிரித்தபடியே இருந்து மகத்தை கோபப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில், மகன் வெளியேற்றிவிட்ட பிறகு மும்தாஜின் சுயரூபம் தெரிய வந்திருக்கிறது. தற்போது எதற்கு எடுத்தாலும் கோபப்படும் மும்தாஜ், அனைவரிடமும் எரிஞ்சி விழுவதோடு, கோபத்தோடு முகத்தை தூக்கி வைத்துக்கொள்ளவும் செய்கிறார். இதனை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், அப்போதே மகத் மும்தாஜை பற்றி சொன்னார். அது உண்மை என்று இப்போது தெரிகிறது” என்று சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.
மேலும், மகத் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை, என்று கூறியிருக்கும் பல ரசிகர்கள், அவர்கள் இருந்தால், காதல், மோதல், ஊடல் என்று அனைத்தும் இருக்கும், என்றும் கூறியுள்ளனர்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...