சினிமா நடிகைகள் போல, டிவி சீரியலில் நடிக்கும் நடிகைகளும் மக்களிடம் பிரபலமாக இருக்கிறார்கள். சில நேரங்களில் சினிமா ஹீரோயின்களையும் தாண்டி இவர்கள் பெண்களிடம் பிரபலமாகிவிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு பிரபலமான சீரியல் நடிகை தான் சந்தியா. ’அத்திப்பூக்கள்’, ‘வம்சம்’ போன்ற சீரியல்களில் நாயகிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்த இவர், வம்சம் சீரியல் மூலம் பூமிகாவாக தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டார்.
சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் சந்தியா ஒரு சில தமிழ்ப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், தன்னை நிரூபிக்கும்படியான வேடம் கிடைக்கவில்லையே, என்ற வருத்தம் இருக்கிறதாம்.
இதற்கிடையில், தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்திருக்கிறாராம். இந்த விஷயம் அறிந்த கோலிவுட் இயக்குநர்கள் சிலர் சந்தியாவை அம்மா வேடத்திற்காக கேட்கிறார்களாம். அதுவும், ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்க சொல்கிறார்களாம்.
ஒரு அக்கா, அண்ணி என்றால் கூட பரவாயில்லை, இப்படி அம்மா வேடத்திற்கு, அதுவும் ஹீரோ, ஹீரோயின்களின் அம்மாவாக நடிக்க கூப்பிடுகிறார்களே, என்று சந்தியா ரொம்பவே அப்செட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...