தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடம் பிடித்திருக்கும் சில ஹீரோயின்களில் ரேவதி முக்கியமானவர். நடிப்பு மட்டும் இன்றி இயக்கம், தயாரிப்பு, தொலைக்காட்சி, சமூக சேவை, அரசியல் என்று பல துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இப்படி பல துறைகளில், பல வெற்றிகளை கடந்து வந்த ரேவதி, இல்லற வாழ்வில் பல இறக்கங்களை சந்தித்தித்தவர், தனது கணவரை விவாகரத்து செய்த பிறகு தனது கவனம் முழுவதையும் சினிமா பக்கம் செலுத்தி வந்தாலும், அவருக்கென்று ஒரு உலகமாக அவரது மகள் இருக்கிறார். என்ன, ரேவதிக்கு மகளா? என்பது பலரிடம் எழும் கேள்வி தான். காரணம், இதுவரை அவரது குழந்தை குறித்து பலருக்கு தெரியாமல் இருக்கிறது. அப்படி அவரது குழந்தை பற்றி சிலருக்கு தெரிந்திருந்தாலும், அது தொடர்பாக பல வதந்திகளும் உலா வருகின்றன.
இந்த நிலையில், பிரபல வார இதழ் ஒன்றில் இணையத்திற்கு ரேவதி அளித்திருக்கும் பேட்டியில், முதல் முறையாக தனது குழந்தை பற்றிய உண்மையை சொல்லியிருக்கிறார்.
இது தொடர்பாக கூறிய ரேவதி, ”தாய்மை ஒவ்வொரு பெண்ணுக்குமான அர்த்தம். அதற்காக நான் ஏங்கின, கலங்கின தருணங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. கணவருடன் விவாகரத்துப் பெற்ற பிறகு, ட் ஹாய்மை குறித்து ரொம்பவே யோசிச்சு முடிவு எடுத்தேன். டெஸ்ட்டியூப் முறையில் கர்ப்பம் ஆனேன். என் மகள் மஹியை பெற்றெடுத்தேன். இப்போ அவளுக்கு 2 வயதாகிறது. ஒரு அம்மாவாக அவளை வளர்த்து ஆளாக்குவதுதான் என் சிறந்த பொறுப்பு, அதை நிறைவுடன் செய்துக்கொண்டிருக்கிறேன்.
நான் பெற்றெடுத்த மஹி, தத்தெடுத்த குழந்தை என்று வதந்திகள் உலா வருகின்றது. அது பற்றி எனக்கு கவலையில்லை. என் குழந்தையைப் பற்றி பெருசா இதுவரை சொன்னதில்லை. இப்போ தான் முதல் முறையாக உண்மையை சொல்கிறேன். மஹி தான் உலகம், அவள்தான் என் வாழ்நாள் அடையாளம்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...