கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயந்தாரா, சொந்தமாக தயாரித்து நடித்துள்ள ‘அறம்’ படம் ரிலிஸாக முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனால், தான் நடிக்கும் படங்களில் புரோமோஷன்களில் கூட கலந்துக்கொள்ளாத நயந்தாரா, தனது கொள்கையை மாற்றிக் கொண்டு தற்போது ‘அறம்’ படத்தின் புரோமோஷன்களில் கலந்துக் கொண்டாலும் அப்படத்திற்கு விமோச்சனம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே நயந்தராவின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘கோலமாவு கோகிலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்பு, ஹன்சிகா நடித்து இன்னும் ரிலிஸாகமல் இருக்கும் ‘வேட்டை மன்னன்’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்க, அனிருத் இசையமைக்கிறார். ‘2.0’ படத்தை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...