கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயந்தாரா, சொந்தமாக தயாரித்து நடித்துள்ள ‘அறம்’ படம் ரிலிஸாக முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனால், தான் நடிக்கும் படங்களில் புரோமோஷன்களில் கூட கலந்துக்கொள்ளாத நயந்தாரா, தனது கொள்கையை மாற்றிக் கொண்டு தற்போது ‘அறம்’ படத்தின் புரோமோஷன்களில் கலந்துக் கொண்டாலும் அப்படத்திற்கு விமோச்சனம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே நயந்தராவின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘கோலமாவு கோகிலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்பு, ஹன்சிகா நடித்து இன்னும் ரிலிஸாகமல் இருக்கும் ‘வேட்டை மன்னன்’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்க, அனிருத் இசையமைக்கிறார். ‘2.0’ படத்தை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...