சிம்பு என்றாலே வம்பு, என்ற இமேஜை உடைத்தெரிந்திருக்கும் சிம்பு, மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்து முடித்த கையோடு ‘மாநாடு’ படத்தில் பிஸியாகியுள்ளார். இதனை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர், இரண்டு வருடங்களுக்கு பிஸியாகிவிட்டார்.
இந்த நிலையில், ஏற்கனவே சிம்பு மீது கடுப்பில் இருந்த ‘ஏஏஏ’ படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், மீண்டும் சிம்புவின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தான் தயாரித்த ‘அடங்காதவன் அசராதவன் அன்பானவன்’ படத்தின் போது சில பிரச்சினைகளை செய்த சிம்பு, தற்போது நடித்து முடித்திருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் பொட்டி பாம்பாக, தயாரிப்பாளர்கள் சொல்வதை கேட்டு சமத்து பிள்ளையாக இருந்துள்ளாராம். இதே போல் தான் படம் தயாரிக்கும் போதும் சிம்பு நடந்திருந்தால், தனக்கு நஷ்ட்டம் ஏற்பட்டு இருக்காது, என்று கருதிய தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்புவின் இந்த ஓரவஞ்சனையால் மிகவும் அதிர்ப்தியடைந்திருப்பவர், மீண்டும் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்து பஞ்சாயத்தை கூட்டுமாறு கோரிக்கையும் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...