சிறு வயதிலேயே சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் கல்யாணி. ‘சாருலதா’, ‘அண்ணாமலை’ ஆகிய சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், ’அளித்தந்த வானம்’, ‘ஸ்ரீ’, ‘ஜெயம்’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதில் ஜெயம் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
பிறகு டிவி ஆங்கராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர், ’மறந்தேன் மெய்மறந்தேன்’, ’பிரதி ஞாயிறு’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், அவர் நடித்த படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றி பெறாததால் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் தொடர்ந்து பல டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
இதற்கிடையே, ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர், திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். திருமணத்திற்குப் பிறகு பெங்களூரில் செட்டிலான கல்யாணிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

தனது குழந்தைக்கு நவ்யா கல்யாணி ரோகித் என பெயர் சூட்டியிருக்கும் கல்யாணி, இனி தனது குழந்தை தான் உலம் என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...