குறைவான படங்கள் இயக்கினாலும், தரமான படம் இயக்கும் இயக்குநர் என்று ‘தரமணி’ மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ள இயக்குநர் ராம், அடுத்து இயக்கும் படம் ‘பேரன்பு’. மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்க மீன்கள்’ சாதனா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
இப்படத்தின் மூலம் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ள ராம், முதல் முறையாக பாடலாசிரியர் வைரமுத்துவுடன் கைகோர்த்துள்ளார். ராம் இயக்கிய மூன்று படங்களுக்கும் மறைந்த நா.முத்துக்குமார் தான் பாடல்கள் எழுதியுள்ளார்.
பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராம், நா.முத்துக்குமார் மறைவுக்குப் பிறகு தனது படங்களுக்கு பாடல் எழுத யாரை அனுகுவார், என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது பேரன்பு படத்தில் வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், ராம், யுவன் சங்கர் ராஜா, வைரமுத்து என்ற புதிய கூட்டணி உருவாகியுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...