ஹாலிவுட் சினிமா, பாலிவுட் சினிமா, கோலிவுட் சினிமா என்று அனைத்து சினிமாக்களிலும் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் பேச தொடங்கி விட்டார்கள். அதிலும் ஸ்ரீரெட்டி என்ற நடிகை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட்டதோடு, தான் அவர்களுடன் படுக்கையை பகிர்ந்துக்கொண்டதையும் வெளிப்படையாக கூறிய பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக பல நடிகைகள் நேரடியாக பேச தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரனும், சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது உண்மையே, என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், ‘கொடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று நடித்து வருபவர், சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதே சமயம், இதுவரை தனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது உண்மை தான் என்று பேசும் நடிகைகள், தங்களுக்கு இதுவரை அதுபோல யாரும் தொல்லை கொடுக்கவில்லை என்று கூறுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
செக்ஸ் டார்ச்சரில் சிக்கும் பல நடிகைகள் தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர் பெயரை சொல்வதற்கு பயப்படுகிறார்கள் என்றும், அப்படி அவர்கள் இது குறித்து வெளியே பேசினால் அவர்களுக்கு சினிமா வாய்ப்பு வராமால் போய்விடும் என்பதாலாயே, தங்களுக்கு யாரும் இதுவரை தொல்லை கொடுக்கவில்லை என்று கூறிவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...